சசிகலாதான் பொதுச்செயலாளர்... ஈபிஎஸ் தான் முதல்வர் - அடித்துச் சொல்லும் அமைச்சர்: வீடியோ
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்வார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் தொடர வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த போது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தெடுக்க சத்தியம் செய்து கொடுத்ததாகக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தினகரன் கட்சி நிர்வாகிகள் பெயர்ப்பட்டியலை அறிவித்திருப்பது முழுக்க முழுக்க குழப்பத்தை விளைவிக்கக் கூடியது. இதைப் பார்த்து மக்கள் எள்ளி நகையாடுவர். இந்த நிர்வாகிகள் பட்டியை தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்காது.
தினகரன் இதை யாரைத் திருப்திபடுத்தவும் முன்னிலைப்படுத்தவும் செய்கிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தேர்தல் ஆணையம் இன்னும் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதையே உறுதிசெய்யவில்லை எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications