இவர் வந்து தொடங்கி வைக்கதான் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு? பரபர பின்னணி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. முதல்வர் பன்னீர் செல்வம் தானே நேரில் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதாக அறிவித்து அதன்படி மதுரைக்கும் வந்திருந்தார். ஆனால், அவசர சட்டம் போதாது, நிரந்தர சட்டம் தேவை என கூறி ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் உள்ளூர் மக்களே தடுத்துவிட்டனர்.

Sasikala may be sworn as CM on January 28

எனவே, மக்களே விரும்பும்போது, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என அலங்காநல்லூர் கிராம சபை முடிவெடுத்துள்ளதன் பின்னணியிலும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கான ரகசிய வேலைகள் நடந்துதான், இப்போது போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+