ஜெ.வுக்கு எதிராக புகார் கூறிய சசிகலா புஷ்பாவின் கணவர் வீடு மீது கல்வீச்சு!
நெல்லை: ஜெயலலிதா மீது ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சரமாரியாக புகார் கூறியிருந்த நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள அவரது வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார்.

நிருபர்களிடம் பேசும்போது, தனக்கோ, கணவருக்கோ, மகனுக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுகதான் பொறுப்பு எனவும் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள சசிகலா புஷ்பாவின், கணவரான லிங்கேஷ்வரின் பூர்வீக வீட்டு மீது இன்று மதியம், மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து உவரி கிராமத்தில், புஷ்பா கணவர் லிங்கேஷ்வரனின் பூர்வீக இல்லம் உள்ளது. அங்குதான் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, சசிகலா புஷ்பா டெல்லியில் வசிக்கும் இல்லத்திலும், சென்னை வீட்டிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications