அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை.. திவாகரன் அதிரடி
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என திவாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜரான திவாகரன் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முதல்நாளே, அதாவது டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத்
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து அன்றிரவே தனது பேச்சை மறுத்த திவாகரன் மருத்துவத் துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இருவகை உண்டு.

கிளினிக்கல் டெத்
அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.

பயாலஜிக்கல் டெத்
இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்து வந்தனர். அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன் என்று கூறினார்.

திவாகரன் ஆஜர்
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனில் திவாகரன் இன்று ஆஜரானார். பல்வேறு ஆவணங்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆஜரானார்.

பெரும் எதிர்பார்ப்பு
ஏற்கனவே சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் நிலவி வருகிறது. தினகரனும் திவாகரனும் எதிரும்புதிருமாக உள்ள நிலையில் ஆறுமுகசாமி கமிஷனில் திவாகரன் என்ன கூறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

தெளிவாக கூறினேன்
இந்நிலையில் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு விசாரணை ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் தெளிவாக கூறினேன் என்றார்.

2 முறை சென்றேன்
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது; அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன் என்றும் திவாகரன் தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போலோவிற்கு 2 முறை சென்றதாக திவாகரன் கூறினார்.

சசிகலா மட்டும்தான் பார்த்தார்
ஆனால் இரண்டு முறையும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை என்றும் இறந்தபின்பே பார்த்தேன் என்றும் திவாகரன் கூறினார். சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை என்றும் திவாகரன் திட்டவட்டமாக கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications