எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ்- கருவிகளும் பறிமுதல்!
எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சத்துக்கான செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.
சென்னை: எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அத்துடன் காதுகேட்கும் கருவிகளுக்கு பணம் தராததால் அந்த கருவிகளும் குழந்தைகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஜெயலலிதாவைப் போல குளோனிங் செய்து கொண்டு சசிகலா நடத்திய நாடகங்களில் ஒன்றுதான் எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றது. எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதியன்று ராமாவரம் தோட்டத்துக்கு சென்றார் சசிகலா.

நன்கொடை
அங்கு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்ததுடன் லதா ராஜேந்திரன் நடத்தி வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ10 லட்சத்துக்கான செக் ஒன்றையும் வழங்கினார். அதேபோல் 240 குழந்தைகளுக்கு ரூ19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் கொடுத்தார்.

செக் பவுன்ஸ்
சசிகலா கொடுத்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் லதா. ஆனால் கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டது வங்கி. இதனால் லதா ராஜேந்திரன் நொந்து போனார். இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் புலம்பித் தவித்தார் லதா.

கருவிகளுக்கு பணம் தரவில்லை
இந்நிலையில் சசிகலா வழங்கிய காதுகேட்கும் கருவிகளுக்கும் உரிய பணம் தரப்படவில்லையாம். இந்த பணத்துக்காக கருவிகளை கொடுத்த நிறுவனம் நடையாய் நடந்ததுதான் மிச்சம்.

கருவிகள் பறிமுதல்
வெறுத்துப் போன அந்த நிறுவனம் காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து 240 குழந்தைகளிடம் இருந்தும் கருவிகளையும் பறித்துக் கொண்டு போய்விட்டதாம். இதனால் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications