எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ்- கருவிகளும் பறிமுதல்!
எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சத்துக்கான செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.
சென்னை: எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அத்துடன் காதுகேட்கும் கருவிகளுக்கு பணம் தராததால் அந்த கருவிகளும் குழந்தைகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஜெயலலிதாவைப் போல குளோனிங் செய்து கொண்டு சசிகலா நடத்திய நாடகங்களில் ஒன்றுதான் எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றது. எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதியன்று ராமாவரம் தோட்டத்துக்கு சென்றார் சசிகலா.

நன்கொடை
அங்கு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்ததுடன் லதா ராஜேந்திரன் நடத்தி வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ10 லட்சத்துக்கான செக் ஒன்றையும் வழங்கினார். அதேபோல் 240 குழந்தைகளுக்கு ரூ19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் கொடுத்தார்.

செக் பவுன்ஸ்
சசிகலா கொடுத்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் லதா. ஆனால் கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டது வங்கி. இதனால் லதா ராஜேந்திரன் நொந்து போனார். இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் புலம்பித் தவித்தார் லதா.

கருவிகளுக்கு பணம் தரவில்லை
இந்நிலையில் சசிகலா வழங்கிய காதுகேட்கும் கருவிகளுக்கும் உரிய பணம் தரப்படவில்லையாம். இந்த பணத்துக்காக கருவிகளை கொடுத்த நிறுவனம் நடையாய் நடந்ததுதான் மிச்சம்.

கருவிகள் பறிமுதல்
வெறுத்துப் போன அந்த நிறுவனம் காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து 240 குழந்தைகளிடம் இருந்தும் கருவிகளையும் பறித்துக் கொண்டு போய்விட்டதாம். இதனால் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
-
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications