சசிகலா மிரட்டலால் மக்கள் பீதியடைந்துள்ளனர் - முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
சசிகலாவின் மிரட்டல் பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா ஓரளவுக்குதான் பொறுமையாக இருக்கமுடியும் என கூறியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளார். சசிகலாவின் பேச்சு வன்முறையை துண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார சண்டையில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் வாக்களித்த மக்களுக்கு துரோசம் செய்து வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளார். சசிகலாவின் பேச்சு வன்முறையை தூண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகார மோதல் அதிகரித்துள்ளது. ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி சசிகலா தரப்பு ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.

ஒவ்வொருவராக இழக்கும் சசி
இந்நிலையில் சசிகலா தரப்பில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா நேற்று போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவிக்கு பேட்டியளித்தார்.

சசிகலாவின் மிரட்டல்
அப்போது ஓரளவுக்குதான் பொறுமையாக இருக்கமுடியும் எனத் தெரிவித்தார். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என மிரட்டல் விடுத்தார்.

மக்களிடையே அச்சம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கருத்து தெரிவித்துள்ளார். சசிகலாவின் பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

வன்முறைகளை தூண்டும்
ஆளும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள சசிகலா மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது வன்முறைகளை தூண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிகாரத்தை கைப்பற்ற சட்டசபை உறுப்பினர்களை அடைத்து வைப்பது என்பது தவறான நடவடிக்கை.

மத்திய அரசு நடவடிக்கை
இரண்டு பேரும் நடத்தக் கூடிய போராட்டத்தால் மத்தியில் இருக்கக் கூடிய அரசு ஆளுநர் மூலமாக அவர்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, முடிந்தவரை இதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கும் என முயற்சி செய்வார்கள். யாருக்கு பலம் உள்ளது என நிருபிக்க தமிழக ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்தார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications