ரஜினி தமிழர் அல்லாதவர் என்பதால் பேராபத்து; எம்ஜிஆர்- ஜெ.வுக்கு பொருந்தாது: நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவுக்காக சுகதுக்கங்களை தொலைத்த சூரியப் பெருந்தாய் சசிகலா என நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்காக சுகதுக்கங்களை தொலைத்த சூரியப் பெருந்தாய் சசிகலா என புகழாரம் சூட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
தமிழகத்தில் தியாகம் செய்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். தியாகம் செய்தவ தலைவர்கள் சும்மா இருக்கின்றனர்.
ஆனால் எந்த தியாகமும் செய்யாதவர் ரஜினிகாந்த். தமிழ அல்லாதவர் தமிழ்நாட்டை ஆளக் கூடாது. ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இறங்கினால் பேராபத்து.

கலாசார சீரழிவு
ரஜினிகாந்த் ஒரு கலாசார சீரழிவு. சசிகலாவும் தினகரனும் ஜெயலலிதாவுக்காக 33 ஆண்டுகாலம் தியாகம் செய்தவர்கள். சுகதுக்கங்களை தொலைத்த பெருந்தாய் சசிகலா.

ஜெ.வின் ஆலோசகர் சசிகலா
ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக வழிகாட்டியாக இருந்தவர் சசிகலா. வழக்கு, அபராதம் என என்ன விதிக்கப்பட்டாலும் தினகரனுக்கு நாடாள்வதற்கு தகுதி இருக்கிறது.

சிறைகளில் நிரபராதிகள்
நீதிமன்றம் சொல்வதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது. தமிழகத்தில் 7 மத்திய சிறைச்சாலைகளைப் பார்த்தவன் நான்.. எத்தனையோ நிரபராதிகள் குற்றவாளி கூண்டிலேற்றப்பட்டுள்ளனர்.

இது தத்துவார்த்த யுத்தம்
ஆடிட்டர் குருமூர்த்தியும் ஹெச். ராஜாவும் தினகரனை எதிர்க்கிறார்கள்.. அதனால்தான் நான் தினகரனை ஆதரிக்கிறேன். இதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. இது ஒரு தத்துவ யுத்தம்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications