சிறை செல்வதற்கு முன்.. கூடி நின்று கதறி அழுத சசிகலா குடும்பம்!
சரணடைவதற்காக பெங்களூரு செல்வதற்கு முன்னர், சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி என மன்னார்குடி குடும்ப உறுப்பினர் அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கதறி அழுதனர்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய இன்று பெங்களூரு புறப்பட்டார்.
1991-1996 ஆகிய காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்தார். பின்னர், சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

குவிந்த மன்னார்குடியினர்
இதனைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினார். மேலும், தஞ்சை, மன்னார்குடி பகுதியில் இருந்து அவரது உறவினர்களும் போயஸ் கார்டனில் குவிந்தார்கள்.

சரண் சசி
உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்காததால் பெங்களூரு செல்ல தயாரானார் சசிகலா. பெங்களூரு செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்துக் கொண்ட சசிகலா அதுகுறித்து உறவினர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

கதறி அழுத்த சசி
பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை சொல்ல இருப்பதால் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, இளவரசி மகன் விவேக், மருமகன், இளவரசியின் மகள்கள், சுதாகரனின் குடும்பத்தார் என அனைவரும் சசிகலா சுற்றி உட்கார்ந்து கொண்டு சோகமே உருவாக இருந்தனர். சசிகலா புறப்படுவதற்கு சற்று முன் சசிகலா உள்பட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

புறப்பாடு
கண்களை துடைத்துக் கொண்ட சசிகலா, பெங்களூரு செல்ல இளவரசியோடு காரில் புறப்பட்டார். போயஸ் கார்டனில் இருந்து நேராக ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஏதோ சொல்லி மூன்று முறை கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். பின், அங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications