சிறை செல்வதற்கு முன்.. கூடி நின்று கதறி அழுத சசிகலா குடும்பம்!
சரணடைவதற்காக பெங்களூரு செல்வதற்கு முன்னர், சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி என மன்னார்குடி குடும்ப உறுப்பினர் அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கதறி அழுதனர்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய இன்று பெங்களூரு புறப்பட்டார்.
1991-1996 ஆகிய காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்தார். பின்னர், சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

குவிந்த மன்னார்குடியினர்
இதனைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினார். மேலும், தஞ்சை, மன்னார்குடி பகுதியில் இருந்து அவரது உறவினர்களும் போயஸ் கார்டனில் குவிந்தார்கள்.

சரண் சசி
உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்காததால் பெங்களூரு செல்ல தயாரானார் சசிகலா. பெங்களூரு செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்துக் கொண்ட சசிகலா அதுகுறித்து உறவினர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

கதறி அழுத்த சசி
பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை சொல்ல இருப்பதால் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, இளவரசி மகன் விவேக், மருமகன், இளவரசியின் மகள்கள், சுதாகரனின் குடும்பத்தார் என அனைவரும் சசிகலா சுற்றி உட்கார்ந்து கொண்டு சோகமே உருவாக இருந்தனர். சசிகலா புறப்படுவதற்கு சற்று முன் சசிகலா உள்பட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

புறப்பாடு
கண்களை துடைத்துக் கொண்ட சசிகலா, பெங்களூரு செல்ல இளவரசியோடு காரில் புறப்பட்டார். போயஸ் கார்டனில் இருந்து நேராக ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஏதோ சொல்லி மூன்று முறை கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். பின், அங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றார்.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?











Click it and Unblock the Notifications