துணை ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் கேரளா ஆளுநர் சதாசிவம்?
துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம்
சென்னை: துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கேரளா ஆளுநரான சதாசிவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சதாசிவம். அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜக தயவில் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சதாசிவம்.

ஜனாதிபதி பதவி
தற்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

சதாசிவம்
இதனிடையே துணை ஜனாதிபதி பதவிக்கு தம்மை நியமிக்கும் லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம். முதல் கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவை கேட்டிருக்கிறார் சதாசிவம்.

எடப்பாடி ஆதரவு
முதல்வர் எடப்பாடியும் அதிமுக ஆதரவு தரும் என உறுதியளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் சதாசிவம்.

பாஜக தயக்கம்
ஆளுநர் பதவியைப் பெற்றது போல எப்படியும் துணை ஜனாதிபதி பதவியை பெற்றே தீருவது என்கிற முடிவில் இருக்கிறாராம் சதாசிவம். ஆனால் பாஜக மேலிடம் சதாசிவத்தை தற்போதைய நிலையில் ஆதரிக்குமா என்பது சந்தேகம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications