துணை ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் கேரளா ஆளுநர் சதாசிவம்?
துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம்
சென்னை: துணை ஜனாதிபதி பதவியை பெறுவதற்கான லாபிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கேரளா ஆளுநரான சதாசிவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சதாசிவம். அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜக தயவில் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சதாசிவம்.

ஜனாதிபதி பதவி
தற்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

சதாசிவம்
இதனிடையே துணை ஜனாதிபதி பதவிக்கு தம்மை நியமிக்கும் லாபிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் கேரளா ஆளுநர் சதாசிவம். முதல் கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவை கேட்டிருக்கிறார் சதாசிவம்.

எடப்பாடி ஆதரவு
முதல்வர் எடப்பாடியும் அதிமுக ஆதரவு தரும் என உறுதியளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் சதாசிவம்.

பாஜக தயக்கம்
ஆளுநர் பதவியைப் பெற்றது போல எப்படியும் துணை ஜனாதிபதி பதவியை பெற்றே தீருவது என்கிற முடிவில் இருக்கிறாராம் சதாசிவம். ஆனால் பாஜக மேலிடம் சதாசிவத்தை தற்போதைய நிலையில் ஆதரிக்குமா என்பது சந்தேகம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications