சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் வன்முறை வெடித்தது.
Recommended Video
சென்னை: சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தில படிக்கும் மாணவி ஆசிரியரின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தேர்வு ஒன்றில் காபி அடித்து மாட்டிக் இருக்கிறார். இதையடுத்து ஆசிரியர்கள் அவரை மிகவும் மோசமாக திட்டியுள்ளனர்
இந்த அவமானத்தை தாங்காத அந்த மாணவி தற்கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பெரும்பாலான விடுதி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்துக்குள் பல இடங்களில் தீ வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு https://t.co/xM6qPFhUoT #Studentprotest #Chennai #college pic.twitter.com/VLYCNamhKu
— Oneindia Tamil (@thatsTamil) November 22, 2017
விடுதியில் உள்ள படுக்கை அறை பொருட்களை தீ வைத்து எரித்து மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கை மீறி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.