எச் ராஜாவின் நாக்கில் சனி உள்ளது... டிடிவி தினகரன் காட்டம்!
பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவின் நாக்கில் சனி இருப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவின் நாக்கில் சனி இருப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் எச் ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

தினகரன் கருத்து
எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தை அவசர அவசரமாக நீக்கினார் எச் ராஜா. இந்நிலையில் எச் ராஜாவின் கருத்து குறித்து ஆர் கே நகர் எம்எல்ஏவான டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

எச் ராஜா நாக்கில் சனி
அதாவது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்ற எச் ராஜாவின் நாக்கில் சனி உள்ளதாக அவர் கூறியுள்ளார். பெரியார் சிலை உடைக்கப்படும் என நாகரிகமற்ற முறையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சுயக்கட்டுப்பாடு இல்லை
கம்யூனிசம் உலகுக்கு தேவையான ஒரு கொள்கை. பெரியார் சமூகநீதி முன்னேற்றத்திற்காக போராடியவர், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடியவர் என்றும் அவர் கூறினார். எச் ராஜாவுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை. அதிகம் கோபப்படுகிறார்.

தமிழ்நாடு கொந்தளிக்கும்
எப்படியாவது கலவரத்தை தூண்டி கட்சியை வளர்க்க பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பெரியார் சிலைகளில் கை வைத்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் என்றும் தினகரன் கூறினார்.

மக்கள் முடிவு செய்வார்கள்
மானிய ஸ்கூட்டர் தொடர்பான கமலின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என ரஜினி கூறியது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications