தேர்தல் விதிகளை மீறி மாணவர்களுக்கு 'அம்மா' படம் போட்ட புத்தகப்பை வினியோகம்: அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடி: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளி மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட புத்தகப்பைகள் வழங்கப்பட்டு வருவது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசு திட்டங்கள், அரசின் உதவிகள் போன்ற எதனையும் செயல்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள், சீருடை, புத்தகப்பை போன்றவை வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆசிரியர்கள் அரசின் புத்தகப் பைகளை வழங்கி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோர்களை கவருவதற்காக ஆசிரியர்களின் துணையுடன் அதிமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புத்தகப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications