கனமழை காரணமாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை !
சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம், புதுவையில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.அதேபோல் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.