பள்ளி திறந்த முதல் நாளே பாட புத்தகம் தரவில்லை.. மாணவர்கள் ஏமாற்றம்
நெல்லை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் பாடபுத்தகம் வழங்கப்படாததால் நெல்லை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவி்க்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து சென்றனர். இந்நிலையில் வெயில் வறுத்தெடுப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழக அரசு திட்டமிட்டப்படி ஜுன்-1ம் தேதி பள்ளியை திறந்தது.

மாணவ, மாணவிகள் புதிய கல்வி ஆண்டை உற்சாகத்துடன் எதிர்கொள்ள நேற்று பள்ளிகளில் திரண்டனர். பலர் கோடை விடுமுறை முடிந்த வந்த தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் இறை வணக்கத்துக்கு பின்னர் பொது பாடம் மற்றும் நீதி நெறி குறித்த வகுப்புகள் நடந்தது.
பள்ளிகள் திறந்த அன்றே பாட புத்தகம் வழங்க வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளி திறப்புக்கு முதல் நாள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திடீரென பாட புத்தகங்களை வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாள் பாட புத்தகம் வழங்கப்படவில்லையாம். மேலும் சில பள்ளிகளுக்கு பாட புத்தகம் முழுமையாக போய் சேரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாட புத்தகம், நோட்டு, சீருடைகள், காலணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications