பட்டினப்பாக்கம் மீனவர்கள் விவகாரம்.. மேயர் பிரியா இப்படி நடந்துகொள்வது ஏற்புடையதல்ல.. எஸ்டிபிஐ
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்ட லூப் சாலையின் ஓரத்தை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது முரணானது. போக்குவரத்து வசதிக்காக லூப் சாலை தான் பாரம்பரிய மீனவர்களின் இடத்தை ஆக்கிரமித்தது என்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் சாலையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் அமைந்துள்ள கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மீனவர்களின் மீன் விற்பனை கடைகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அகற்றி வருகின்றனர். மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதற்கு எதிராக மீனவர்கள் போராடிய போதும், அதனை கண்டுகொள்ளாமல் இரண்டு நாட்களாக பெருமளவிலான காவல்துறையினர் உதவியுடன் அதிகாரிகள் கடைகளை துரிதமாக அகற்றி வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்ட லூப் சாலையின் ஓரத்தை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது முரணானது. போக்குவரத்து வசதிக்காக லூப் சாலை தான் பாரம்பரிய மீனவர்களின் இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.

பூர்வீக உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களால் உருவானதே சென்னை நகரம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், சென்னை நகரின் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களின் வசிப்பிடங்களை, வாழ்வாதாரங்களை காலி செய்ய நினைப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. கடலும், கடல் சார்ந்த இடமும் மீனவர்களுக்கு சொந்தமானது. அதனை உரிமை கொள்ள, அபகரிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. வளர்ச்சி, நகரமயமாக்கல் என்கிற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பது போல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைப்பது ஏற்புடையதல்ல.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் சென்னை மாநகரின் நகர விற்பனைக் குழு (Town vending committee) உயர்நீதிமன்றத்தால் கலைக்கப்பட்ட பிறகு, புதிய குழு இன்னும் மாநகராட்சியால் ஏற்படுத்தப்படாமல் இருப்பதும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கும் ஒரு காரணமாகும்.
நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் கடைகள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிந்து, கடைகள் வைப்பதற்கான பகுதியை கண்டறிவது இந்த நகர விற்பனைக் குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், குழுவை அமைக்காமல் கடைகளை அராஜகமான முறையில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவது கண்டிக்கத்தக்கது.

இந்த நடவடிக்கை தொடர்பில் மாநகராட்சி மேயர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், எளிய குடும்பத்தில் பிறந்து எளிய மக்களின் வாழ்வாதார சூழலை அறிந்த மேயர் இவ்வாறு நடந்துகொள்வது ஏற்புடையதல்ல. உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
ஆகவே, உடனடியாக நகர விற்பனைக் குழுவை அமைப்பதோடு, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்து, பாரம்பரிய பட்டினப்பாக்கம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications