தொகுதிப் பங்கீடு பற்றி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும்: ஸ்டாலின்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது நிருபர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:

கேள்வி: பிரதமர் மற்றும் ராஜபக்சேவின் சந்திப்பு பற்றி?
பதில்: தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே இதை பற்றி அறிக்கை வெளியிட்டுவுள்ளார்.அதுவே தான் என்னுடைய கருத்தும்.
கேள்வி: தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யபட்டுவிட்டதா?
பதில்: இன்றைக்கு அல்லது நாளைகுள் விவரங்கள் அறிவிக்கப்படும்.
கேள்வி: உச்சநீதி மன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய கூடாது என மத்திய அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதே?
பதில்: வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது கருத்து கூற விரும்பவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications