ஆர்.கே.நகரில் இரவு நேர பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதித்தது தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகரில் இரவு நேர பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வீதி வீதியாக ஆய்வு செய்யும் மைக்ரோ குழுவினரும் அமைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு வேட்பாளர் ஒருவர் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்குடிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் இரவு நேரமான மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மேலும் தற்காலிக பூத் அமைக்கவும், வீதிகளில் கட்சியினர் அமரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கடந்த காலங்களில் இரவு நேரங்களில் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications