உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்று தாக்கல் செய்யவில்லை
உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
Recommended Video

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யவில்லை.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரம், தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிபதிகளாகிய நாங்கள் உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து விசாரணையை ஆகஸ்டு 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் தேர்தல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணைகள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்றும் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை.
வார்டு மறுவரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால் தாக்கல் செய்யவில்லை என்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கும்படியும் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் வார்டு மறுவரையறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications