நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
நெல்லை: கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜூலை 10-ம் தேதி இரவு அணுப்பிளவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது.

இதில் 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து 750 மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இரண்டவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கபட்டு நாள் ஒன்றுக்கு 680 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தது.தொடர்ந்து இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் மாதம் 23 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.பழுதானது சரி செய்யபட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கபட்டது.
மீண்டும் இந்த மாதம் இம்மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக நிறுத்தபட்டது. இந்த பழுதானது 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என வளாக இயக்குனர் தெரிவித்தார். ஆனால் பழுதானது இன்று சரி செய்யபட்டு காலை 11.22 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார்.
மேலும் இது நாளை காலை 1௦ மணிக்குள் 9௦௦ மெகாவாட் மின்சாரத்தை எட்டும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே கோடை வெயிலின் காரணமாக அதிக மின்சாரம் தேவை படும் நிலையில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மின் தேவையை ஓரளவுக்கும் ஈடுகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் இரண்டாவது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கபடும் எனவும் கூடங்குளம் வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார். முதலாவது அணு உலையில் தற்போது850 மெகாவாட் உற்பத்தி செய்யபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications