Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜூலை 10-ம் தேதி இரவு அணுப்பிளவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது.

second nuclear reactor has begun power generation again in Koodankulam

இதில் 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து 750 மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இரண்டவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கபட்டு நாள் ஒன்றுக்கு 680 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தது.தொடர்ந்து இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் மாதம் 23 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.பழுதானது சரி செய்யபட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கபட்டது.

மீண்டும் இந்த மாதம் இம்மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக நிறுத்தபட்டது. இந்த பழுதானது 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என வளாக இயக்குனர் தெரிவித்தார். ஆனால் பழுதானது இன்று சரி செய்யபட்டு காலை 11.22 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார்.

மேலும் இது நாளை காலை 1௦ மணிக்குள் 9௦௦ மெகாவாட் மின்சாரத்தை எட்டும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே கோடை வெயிலின் காரணமாக அதிக மின்சாரம் தேவை படும் நிலையில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மின் தேவையை ஓரளவுக்கும் ஈடுகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இரண்டாவது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கபடும் எனவும் கூடங்குளம் வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார். முதலாவது அணு உலையில் தற்போது850 மெகாவாட் உற்பத்தி செய்யபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+