காவிரி உரிமை மீட்புக்கான 2-வது குழு : அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணம் துவக்கம்
காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூரில் இருந்து 2ம் நாள் நடைபயணத்தை துவக்கியது.
Recommended Video

அரியலூர் : காவிரி உரிமை மீட்பு நடைபயணத்திற்காக இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தைத் துவங்கியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், காவிரியில் டெல்டா விவசாயிகளின் உரிமையை மீட்கக் கோரியும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடக்கும் இந்த நடைபயணம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இதற்கான பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை ஸ்டாலின் துவக்கியுள்ளார்.
இதனிடையே, காவிரி உரிமை மீட்புக்கான இரண்டாவது குழு இன்று அரியலூர் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டாவது நாள் நடைபயணத்தை துவக்கியுள்ளது.
இந்த இரண்டாவது குழுவில் திமுகவின் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications