ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்.. ரசிகர் மன்ற தலைவர் அறிவிப்பு!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். தற்போது வேலூர் மாவட்ட மக்கள் மன்ற செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது முதல்முறையாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வேலூர் மாவட்ட மக்கள் மன்ற செயலாளராக ரவி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் மகளிர் அணி செயலாளராக சங்கீதா நியமனமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக அருண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications