சுதந்திர தினவிழா : சென்னை விமான நிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு : வீடியோ
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையம், ரயில்நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நடு முழுவதும் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி, 71ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கு ஏழு அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

சென்னை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சுதந்திர தின விழா முடியும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.












Click it and Unblock the Notifications