சொன்னோமே, செஞ்சோம் பார்த்தீங்களா?: ட்வீட்டும் கருணாநிதி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி திமுக ஆட்சியின்போது நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து ட்விட்டரில் விளக்கி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதை மையமாக வைத்து சொன்னீங்களே, செஞ்சீங்களா என சன் குழும தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தான் சொன்னதை செய்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
உழவர் சந்தை
விவசாயிகளின் விளைபொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்கும் உழவர் சந்தை கொண்டு வந்த அரசு திமுக அரசு என ட்வீட்டியுள்ளார் கருணாநிதி.
|
கடன் தள்ளுபடி
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு என செய்ததை எடுத்துக் கூறி வாக்கு கேட்கிறார் கருணாநிதி.
|
சமத்துவபுரம்
அனைத்து சாதி மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுத்த சமத்துவபுரம் கொண்டு வந்தது திமுக அரசு என கருணாநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வரும் முன் காப்போம்
வரும் முன் காப்போம் திட்டம் தந்த அரசு கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்று ட்வீட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தான் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரச்சார மேடைதோறும் விளக்கி வரும் நிலையில் கருணாநிதி ட்விட்டரை கையில் எடுத்துள்ளார்.
|
கர்ப்பிணி
கர்ப்பிணி பெண்களை தாயன்போடு அரவணைத்தது திமுக அரசு என கருணாநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏழைகள் வீடு அற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அரசு திமுக அரசு என்று தான் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை விளக்கிக் கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications