கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்!
சின்னசேலம்: மறுபடியும் உதயசூரியனுக்கோ, இரட்டை இலைக்கோ ஓட்டு போட்டீர்கள் என்றால் உங்கள் கைகளுக்கு குஷ்டம்தான் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
Recommended Video
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

லாபம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை பாலைவனமாக மாற்றியதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. உயிரைக் காக்கும் மருத்துவத்தை தனியார் முதலாளிக்கு லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளார்கள்.

தமிழகம்
ஆற்று மணலை அள்ளி விற்று, பல்லாயிரம் கோடிகளை குவித்துள்ளனர். உடலுக்கு எப்படி தோல் முக்கியமோ அது போல் ஆற்றுக்கு மணல் முக்கியமானது. ஆற்றில் மணலை அள்ளிவிட்டால் ஆறு இறந்துவிடுகிறது. அது போல் தமிழகத்தில் 32 ஆறுகள் அழிந்துவிட்டன.

கற்கள்
அடுத்து மலைகளில் உள்ள கற்களை எம் சாண்ட் மலை மணல் என்று நொறுக்குகிறார்கள். நாங்கள் பெண்களுக்கு சம வாய்ப்பை கொடுத்துள்ளோம். திமுக, அதிமுக கட்சிகள் பெண்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கியுள்ளது என்பதை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

இரட்டை இலை
மறுபடியும் உதயசூரியன், இரட்டை இலைக்கு நீங்கள் ஓட்டு அளித்தீர்கள் என்றால் உங்கள் கைக்கு குஷ்டம்தான் வரும் என சீமான் தெரிவித்தார். பெரும்பாலான பிரச்சாரங்களில் எங்களுக்கு போடுங்கள் ஓட்டை, அப்பறம் பாருங்கள் தமிழ் நாட்டை என்றும் சீமான் கூறிவருகிறார்.












Click it and Unblock the Notifications