நான் பச்சை தமிழன்னு கர்நாடகாவில் போய் ஒரு முறை சொல்லிட்டு வாங்க பார்ப்போம்- ரஜினிக்கு சீமான் சவால்
நான் பச்சை தமிழன்னு கர்நாடகாவில் போய் ஒரு முறை சொல்லிவிட்டு வாங்க பார்ப்போம் என்று ரஜினிகாந்துக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: நான் பச்சை தமிழன்னு அரசியலுக்கு வரும்போது சொல்லும் ரஜினிகாந்த், இந்த வார்த்தையை ஒரே ஒரு முறை கர்நாடகத்துக்கு சென்று சொல்லிவிட்டு வர சொல்லுங்கள் பார்ப்போம் என்று அவருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்காக நன்மை செய்வேன் என்றும் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார். இதிலிருந்து ரஜினி அரசியலுக்கு வர விருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதற்கு சீமான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சீமானும் தமிழ் அமைப்பினரும் தெரிவித்தனர். இதையடுத்து ரஜினி தான் ஒரு பச்சைத் தமிழன் என்றும் தான் பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் என்றும் பிழைப்புக்காகவே கர்நாடகத்துக்கு சென்றோம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கும் கடும் கொந்தளிப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து சீமான் பேசுகையில், தமிழகத்துக்கு ரஜினி வந்து 44 ஆண்டுகள் ஆயிற்று எனினும் அவர் இதுவரை தான் ஒரு பச்சைத் தமிழன் என்று ஒரு தருணங்களில் கூட சொன்னதில்லை.
ஆனால் தமிழக மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்து விட்டதோ அப்போதே அவர் தான் ஒரு தமிழர் என்று கூறி வருகிறார். தான் ஒரு பச்சைத் தமிழன் என்பதை கர்நாடக மாநிலத்துக்கு சென்று ரஜினியை ஒரே ஒரு முறை கூறிவிட்டு வரசொல்லுங்க பார்ப்போம். இதை பந்தயமக சொல்லிகிறேன். அவர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு சேலன்ஞ் என்றார்.












Click it and Unblock the Notifications