கவுரி லங்கேஷ் படுகொலை.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.. சீமான் கோரிக்கை
கன்னட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷை படுகொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கவுரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருமதிப்பிற்குரிய கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி இந்தியப்பெருநிலத்தின் அறிவுச்சமூகத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தனது கருத்துகளைத் துணிவோடு வெளிப்படுத்திக் கொண்டிருந்த முற்போக்காளர் கவுரியின் மரணம் இந்திய நாட்டில் நிலவும் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டது. பேராற்றலும், நெஞ்சுரமும், நம்பிக்கையும் நிறைந்த பெண்ணாக வாழ்ந்து, எதற்கும் அஞ்சாமல் மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் எளிய மக்களின் மனசாட்சியின் குரலாக மதிப்புமிகு கவுரி லங்கேஷ் திகழ்ந்தார்.
எல்லாராலும் அறியப்பட்ட அறிவும், ஆற்றலும் நிரம்பிய ஒரு எழுத்தாளரின் உயிருக்குக்கூட இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்துத்துவ உள்நோக்கப்பணிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படுகொலை குறித்து மத்திய அரசு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு உண்மைக்குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
ஏற்கனவே, படுகொலை செய்யப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர் கல்புர்கி படுகொலை குறித்தக் குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படாத நிலையில் எழுத்தாளர் கௌரி அவர்களின் படுகொலையும் நடந்திருப்பது நமக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஷ் அவர்களின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் விரைவாக கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கவுரி லங்கேஷ் அவர்களை இழந்துவிடும் குடும்பத்தினருக்கும், கன்னட இன மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவார்ந்த பெருமகள் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications