உண்ணாவிரதத்தில் குதித்த சீமான்.. 26ம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மதுரையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டதடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இளைஞர்களும், மாணவர்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை விஸ்வரூபமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மதுரையில் பெரியார் சிலை முன்பாக இன்று தனது கட்சியினரோடும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோடும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சீமானுடன் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications