திருவிகவின் 135வது பிறந்தநாள்.. சீமான் மலரஞ்சலி!
திரு.வி.கவின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலரஞ்சலி செலுத்தினார்.
சென்னை : தமிழ்த்தென்றல் திரு.வி.கவின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார் கலியாணசுந்தரனால். இன்று அவருடைய 135வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை போரூரை அடுத்த துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள திரு.வி.க இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications