மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன.. சீமான் வேதனை
நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்றால் இதுநாள் வரை நீட் படிக்காமல் மருத்துவர்களானவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார
சென்னை: நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்கள் உருவாக்கும் என்றால் இதுவரை நாட்டில் உருவான மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவுக்கு நியாயம் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அரியலூர் செல்ல முடியாதவர்கள் ஆங்காங்கே அனிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியனர் அஞ்சலி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிணைத்து அனிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனிதாவை கொன்றுவிட்டன
இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

கல்வியை சர்வதேச சந்தை
நாட்டின் ஆட்சிமுறை கல்வியை சர்வதேச சந்தையாக மாற்றிவிட்டது. நீட் தேர்வால்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும் என்றால் இதுவரை உருவான மருத்துவர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லையா.

உலக நுழைவு தேர்வு
தேசிய நுழைவு தேர்வை தொடர்ந்து உலக நுழைவு தேர்வு வரப்போகிறது. இந்த உலக நுழைவு தேர்வு வந்தால் இந்தியாவில் யாருமே டாக்டராக முடியாது என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications