ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: திருச்சியில் மதிமுக-நாம் தமிழர் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில், ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற விழாவில் பங்கேற்க கடந்த 19-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.

அப்போது, இவர்கள் இருவரையும் வரவேற்க இரு அணியின் தொண்டர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். இரு கட்சி தொண்டர்களிடம் சமீப காலமாக மோதல் இருந்துவரும் நிலையில், அன்றைய தினம் நேருக்கு நேர் சந்திப்பின்போது மீண்டும் மோதல் ஏற்பட்டது. இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கத்தினர்.
இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அதுவே கைகலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் கொடிக்கம்பத்தை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக சீமான் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் மோதல் நடைபெற்றபோது தான் அந்த பகுதியிலேயே இல்லை என முன்ஜாமீன் கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜூன் 4 வரை சீமானை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சீமான் முன்ஜாமீன் மீதான விசாரணையை ஜூன் 4-க்கு ஒத்திவைத்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications