நீங்க என்ன ஆங்சாங்சூகியா? அன்னை தெரசாவா?ன்னு ஜெ,விடம் ஏன் கேட்கவில்லை... சீறிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து இறந்ததற்கு தம்முடைய மேடை பேச்சுகள் காரணம் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மறுத்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று முன்தினம் காவிரி நதிநீர் உரிமை மீட்பு பேரணியை நடத்தினர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் உரிமையை மீட்க வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்தார்.

கர்நாடகாவில் கேட்க முடியுமா?

கர்நாடகாவில் கேட்க முடியுமா?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

கர்நாடகாவில் அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறீர்களே? நியாயமான என அங்கே போய் பத்திரிகையாளர்கள் கேட்டுவிட முடியுமா? நாங்க யாரும் தீக்குளித்து சாக வேண்டும் என்று சொல்லவில்லை.

உணர்வெழுச்சிதான்..

உணர்வெழுச்சிதான்..

எதை ஒன்றையும் இழக்காமல் பிறிதொன்றை அடைய முடியாது. அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்றா நாங்கள் வழிநடத்துகிறோம்?. தீக்குளிப்பு என்பது உணர்வெழுச்சியால் நிகழ்கிற ஒன்று...

ஜெ.வுக்காக ஏன் இறந்தார்கள்?

ஜெ.வுக்காக ஏன் இறந்தார்கள்?

எந்த ஒருவரது முறுக்கேற்றும் பேச்சால் தீக்குளிப்பு நிகழ்வதில்லை. அப்படியானால் ஊழல் வழக்கில் சிறைக்கு போன ஜெயலலிதாவுக்காக 100 தமிழர் தற்கொலை செய்து கொண்டார்களே? அம்மையார் ஜெயலலிதா என்ன முறுக்கேற்றுவது போல் தற்கொலை செய்து கொள்ளுவது போல் பேசினார்?

ஜெ.விடம் கேட்க முடியுமா?

ஜெ.விடம் கேட்க முடியுமா?

ஜெயலலிதாவிடம் போய் நீங்க என்ன ஆங்சாங் சூகியா? அன்னிபெசன்ட் அம்மையாரா? அன்னை தெரசாவா? உங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார்களே ஏன் என உங்களால் கேட்க முடியுமா?

இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+