சென்னை பல்கலைக்கழக நிதியில் முறைகேடு.. விசாரணை கோரும் செனட் உறுப்பினர்கள்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் நிதியில் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழக நிதி, திட்டமிடப்படாத செலவீனத்திற்கு திருப்பி விடப்படுவதாகவும் செனட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக செனட் கமிட்டியில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பலக்லைக்கழக நிதி முறைகேடாகச் செலவிடப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 6 ஆண்டுகளில் பெருமளவில் மோசடி நடந்துள்ளது. இதில் நானோ அறிவியல் துறைக்கான பணம் ரூ. 16 கோடியையும் திருப்பி விட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
பேராசிரியர் ஆர். தாண்டவன் மற்றும் பேராசிரியர் திருவாசகம் ஆகியோர் துணை வேந்தர்களாக இருந்த சமயத்தில் இந்த முறேகேடுகள் நடந்துள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நானோ அறிவியல் துறையை நிர்மாணிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. ஆனால் அதன் நிதியையைும் திட்டமிடப்படாத செலவுகளுக்குத் திருப்பி விட்டு முறைகேடு செய்துள்ளனர்.
இது குறித்த புகாரை முதலில் எழுப்பியவர் செனட் உறுப்பினர் சுந்தரம் ஆவார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற நிதி மாற்றம் முன் அனுமதி பெறப்படாமல் நடந்துள்ளது. இது தவறானது. இதில் பெரும் முறைகேடு செய்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் நடந்த நிதிப் பரிமாற்றம், செலவுகள் குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார் சுந்தரம்.












Click it and Unblock the Notifications