கிணற்றில் மிதந்த வயதான தம்பதியின் உடல்கள்... அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் வயதான தம்பதிகளின் உடல் கிணற்றில் மிதந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது கொலையா அல்லது தற்கொலையா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள முத்துபட்டியில் வயதான தம்பதிகள் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியைச் சேர்ந்த முத்தையா ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தன் மனைவி வாசுகியுடன் முத்துப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரின் உடல் வீட்டின் அருகேயிருந்த கிணற்றில் பிணமாக மிதந்துள்ளது.
இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து அங்கு வந்த போலீசார், உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியினர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் முத்தையாவின் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் துப்பு துலக்குவதில் போலீசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் கொலை, கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.