கடவுளும் கண்ணீர் சிந்துவார் இந்த முதியவர்களின் நிலையைப் பார்த்தால்!
சேலம்: சேலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் மனித கழிவுகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் அன்னதானப்பட்டியில் மாநகராட்சி உதவியோடு கலைவாணி என்பவர் முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். இதில் 35 முதியவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.
இந்த இல்லத்தில் முதியவர்களுக்கு கொடூரங்கள் நடப்பதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

தண்ணீர் தொட்டி
அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு வற்புறுத்தப்படுகிறார். அதுபோல் மூதாட்டி ஒருவர் தண்ணீர் தொட்டியில் இறக்கப்பட்டு சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதை பார்ப்போர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த இல்லத்தின் உரிமையாளர் கலைவாணியிடம் கேட்டபோது கழிவை சுத்தம் செய்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால்தான் அவர் அதுபோல் செய்கிறார்.

மக்கள் கோரிக்கை
என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற புகார்களை எழுப்புவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற முதியவர் இல்லங்களை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் முறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

பரபரப்பு
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை அகல வேண்டும் என்றும் கழிவுநீர் துளைகளில் துப்புரவு ஊழியர்கள் தங்கள் கைகளால் சுத்தம் செய்ய வைக்கக் கூடாது என்றும் தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் முதியவர் இல்லத்தில் அதுவும் ஆதரவற்றவர் என்றும் பாராமல் அவரை மனிதக் கழிவுகளை அள்ள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications