நடிகையுடனான நள்ளிரவு சண்டையை கள்ளக் காதலாக கதை கட்டியதால் மன உளைச்சல்- சுகுமாறன்

நள்ளிரவில் சீரியல் நடிகையுடன் மோதலில் ஈடுபட்டதை தவறாக சித்தரிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளர் சுகுமாறன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கும் நடிகை சபீதாவிற்கும் இடையேயான மோதலை தவறாக சித்தரித்து வெளியிட்டதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளர் சுகுமாறன் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார் திருநகரில் வசித்து வரும் சுகுமாறன் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்தார். நாடகத் தொடர்களுக்கு இடம் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கவனித்து வரும் இவர் நடிகை சபீதாவிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில், கடந்த 27ம் தேதி வெளியூர் செல்ல இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு நடிகை சபீதா நள்ளிரவில் வந்து கடனை திருப்பிக் கேட்டுள்ளார்.

இதில் சபீதாவிற்கும் சுகுமாறனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பும் ஆகிவிட்டது. இதனை தனது செல்போனில் படமெடுத்த அதே அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோ காட்சிகளை மாற்றி சித்தரித்து தங்கள் இருவருக்கும் தகாத உறவு இருப்பதாக கதைகட்டி விட்டதாக சுகுமாறன் கூறியுள்ளார்.

 பணம்தான் பிரச்சனை

பணம்தான் பிரச்சனை

உண்மையிலேயே தனக்கும் சபீதாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாம் தர வேண்டிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் என் வீட்டு வாசலில் நின்று சபீதா சண்டையிட்டதாகவும் சுகுமாறன் தெரிவித்துள்ளார். தான் வெளியூர் சென்றுவிட்டு வந்து பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியும் சபீதா ஏற்காமல் கடுமையான வார்த்தைககளால் திட்டியதாலேயே கைகலப்பு ஏற்பட்டதாகவும் சுகுமாறன் விளக்கமளித்துள்ளார்.

 20 ஆண்டு திரை அனுபவம்

20 ஆண்டு திரை அனுபவம்

கிழக்குச் சீமையிலே படம் முதல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரை ஏராளமான படங்களுக்கு ஷுட்டிங் ஸ்பாட் தேர்வு செய்யும் பணியில் இருந்து வந்துள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் 20 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள சுகுமாறன் தான் பெண்களை எப்போதும் தவறான கண்ணோட்டத்தில் பார்தததே இல்லை என்று தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.

 தற்கொலை முடிவு

தற்கொலை முடிவு

ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு நபருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக அந்த நபர் சண்டையை வீடியோ படம் எடுத்து தவறான தகவலை பரப்பிவிட்டதாக விளக்கமளித்துள்ளார் சுகுமாறன். இந்த வீடியோ காட்சி வெளியானதால் தமக்கு வேலையும் பறிபோய்விட்டதால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு 110 தூக்க மாத்திரைகளுடன் சுற்றியதாகக் கூறுகிறார் சுகுமாறன்.

 சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

ஆனால் தன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அளித்த உறுதியால் மனதை தேற்றிக் கொண்டு தற்போது கேரள மாநிலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளாராம் சுகுமாறன். இரண்டு தினங்களில் சென்னை திரும்பியது தவறான தகவலை பரவவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகுமாறன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+