திண்டுக்கல் அருகே லாரி-கார் மோதி விபத்து: 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பழனி-திண்டுக்கல் சாலையில் லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
பழனி அருகே சத்திரபட்டியில் வீரலப்பட்டி சந்திப்பில் அனுப்பட்டி என்ற இடத்தில் இன்று காலையில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை, பழனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும், இரண்டு பேர் பலியானர்கள். பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications