ஐ.எஸ்.ஐ போலி முத்திரை பற்றி நீங்க புகார் செய்ய வேண்டிய எண் 044-2254 1076

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகளை ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தரக்கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர் ஹெச்.அஜய் கன்னா , "இந்திய தரக்கட்டுப்பாட்டு துறையின் தென்மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் வட்டம், திருப்பந்துறையூர் கிராமத்தில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் 20 லிட்டர் குடிநீர் கேனில் போலியாக ஐ.எஸ்.ஐ முத்திரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு உரிமம் காலமும் நிறைவடைந்துள்ளது. எனவே அச்சடிக்கப்பட்ட லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய தரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி போலி முத்திரை பயன்படுத்திய குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறையோ அல்லது ரூபாய் 50 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகள் பயன்படுத்துபவர்கள் குறித்து இணையதளத்திலோ, பேக்ஸ் மூலமாகவோ புகார் அளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

புகார்களைத் தெரிவிக்க:
தொலைபேசி எண்: 044-2254 1076
பேக்ஸ் எண்: 044- 2254 2168

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+