நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன்... 22 மணி நேர விசாரைணைக்குப் பின் கைது
புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய விவகாரத்தில் உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

விருதுநகர் : புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒருவரான மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவிகளுக்கு சலுகை, பண ஆசை காட்டி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வைக்க நினைத்த புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ ஏப்ரல் 15ம் தேதி வெளியான நிலையில் பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் அம்பலமானது. இந்த விவகாரத்தில் கடந்த 16ம் தேதி நிர்மலா தேவி அருப்புகோட்டையில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 18ம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி போலீசார் நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி மற்றும் சக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியது. இதனைத்தொடர்ந்து நிர்மலா தேவியின் வீட்டிலும் ஆதாரங்களைத் தேடி சோதனை நடத்தியது.
நிர்மலாதேவியிடம் 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்திய போது அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமி இருவர் பெயரை கூறியுள்ளதாக தெரிகிறது. கருப்பசாமி தலைமறைவாக உள்ள நிலையில் முருகனிடம் நேற்று பகல் 1.30 மணி முதல் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது.
9 பேர் கொண்ட குழுவினர் 22 மணி நேரம் முருகனிடம் நடத்திய விசாரணையில் நிர்மலாதேவிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள முருகன் விரைவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications