கன்னியாகுமரி அருகே அரசு விடுதியில் 9 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. சமையல்காரர் அட்டூழியம்!
கன்னியாகுமரி அருகே அரசு விடுதியில் சிறுவர்களுக்கு சமையல்காரர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி: அரசு விடுதியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு சமையல்காரர் பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கழித்துறையில் ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள சமையல்காரர் குறிப்பிட்ட 9 சிறுவர்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஆனந்த் எம்கே மூன்று முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதில் சமையல்காரர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சமையல்காரரை மாவட்ட ஆட்சியர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications