காதலை ஏற்க மறுத்தவளை கத்தியால் குத்திக்கொன்றேன்.. கொலையாளி அசால்ட் வாக்குமூலம்
சேலம்: என்னுடைய காதலை ஏற்க மறுத்துவிட்டாள்.... என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள்... எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்... என்று சேலம் அருகே ப்ளஸ் டூ பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.
கொலையான மாணவியின் பெயர் தாரணி(17) என்பதாகும். இவர் சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவியின் மகளாவார். ரவிக்கு தாரணி தவிர கவுசல்யா (12) என்ற மகளும், கோவிந்தராஜ் (14) என்ற மகனும் உள்ளனர். தாரணி, வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த லோகநாதனுக்கு (22) மாணவி தாரணி மீது ஒரு கண் இருந்தது. மாணவியை ஒருதலையாக காதலித்தான் லோகநாதன். ஆனால் இந்த காதலை தாரணி ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
வழக்கம் போல நேற்று பெற்றோர்களிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்றாள் தாரணி. தோழிகளிடம் சிரித்து பேசியபடி மாலையில் பள்ளியில் இருந்து திரும்பிய தாரணிக்கு அதுதான் கடைசி சிரிப்பு என்பது தெரியாமலேயே போய்விட்டது. எமன் லோகநாதன் வடிவில் வழியில் காத்திருப்பது தெரியாமலேயே வீடு திரும்பினாள் தாரணி.
வழியில், காத்திருந்த லோகநாதன், தாரணியின் கையைப் பிடித்து வம்பு செய்துள்ளான். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான் லோகநாதன். ஆனால், அதற்கு தாரணி மீண்டும் மறுக்கவே, ஆத்திரமடைந்த லோகநாதன், மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து குத்தினான்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியபடி ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தாரணியை கீழே விட்டு விட்டு தப்பி ஓடினான் லோகநாதன். தாரணியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் தாரணி.
கொலையாளி கைது
இந்த சம்பவம் பற்றி தாரணியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்.பி தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், நடத்திய தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த லோகநாதன் சிக்கினான். அவனை இன்று கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன் மீது கொலை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொன்றது ஏன்?‘
மாணவியை கொன்றது ஏன் என்பது பற்றி வாக்குமூலம் அளித்த லோகநாதன், நான் தாரணியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறேன். ஆனால் தாரணி என்னை காதலிக்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன் தாரணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். ஆனால் தாரணியின் பெற்றோர், எனக்கு தாரணியை தர மறுத்துவிட்டனர். தாரணியிடம் கூறியும் அவளும் ஏற்க மறுத்துவிட்டாள். எனவேதான் எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற கோபத்தில் குத்திக்கொன்றேன் என்று அசால்டாக கூறியுள்ளான். காதலிக்க மறுத்த மாணவியை கூலித்தொழிலாளி ஒருவன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications