பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்ப்பதா? - நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம்
தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி சிவசேனா நிர்வாகி போராட்டம் நடத்தினார்.
நெல்லை: தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகள் வைத்துள்ள பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ரயில் நிலைய சந்திப்புக்கு எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி ஒருவர் போராட்டம் நடத்தினார்.
தாமிரபரணியைக் காக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தியவரின் பெயர் ரமேஷ் என்பதாகும். இவர் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தலைவராகவும் ரமேஷ் இருந்து வருகிறார். குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து பெப்சி, கோகோ கோலா ஆகிய குளிர்பான ஆலைகள் லட்சக்கணக்கான தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவினை எதிர்த்து பெப்சி, கோக் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இது நெல்லை மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சிவசேனா மாவட்ட தலைவர் ரமேஷ் நெல்லை ரயில் நிலைய சந்திப்புக்கு எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தினார்.
அவரை மீட்க தீயணைப்பு படையினரும், போலீசாரும் முயற்சி செய்து வருகின்றனர். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications