நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு
நெல்லை: ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அங்குள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் செயல்பட்டு வந்த அவரது கடையில் நேற்று நடந்த சம்பவம்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி
26 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுப்பதற்காக அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் முகமது அசரப் அலி தனது செல்போனில் அந்த பெண்ணின் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணை ஆபாச கோணத்தில் வீடியோவும் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எப்படியோ அறிந்துகொண்ட அந்த பெண் உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கணவர் வந்ததும் ஓட்டம்
தகவல் அறிந்த கணவர் உடனடியாக கடைக்கு விரைந்து வந்து அசரப் அலியிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அவசரத்தில் அவர் பயன்படுத்திய செல்போன் மட்டும் அங்கேயே சிக்கியது. இதையடுத்து அந்த தம்பதி நேரடியாக பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
புகாரின் அடிப்படையில் போலீசார் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களையும் தொலைவில் இருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் வழக்கு
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறர் அறியாமல் அவர்களின் அந்தரங்கத்தை கண்காணிப்பது மற்றும் பதிவு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் செயல்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில் கைது
பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு முகமது அசரப் அலியை போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெராக்ஸ் கடையில் தொடங்கிய இந்த சம்பவம், செல்போனில் இருந்த தகவல்களால் பெரிய அதிர்ச்சி விவகாரமாக மாறியுள்ள நிலையில், அந்த நபரிடம் இருந்து மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகப் போகின்றன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications