தமாகாவிலிருந்து 'எஸ்கேப்பான' வேலூர் தொழிலதிபர் முனிரத்னம் சோளிங்கர் வேட்பாளர் ஆனார்!
சென்னை:வாசனின் கூட்டணி முடிவால், அதிருப்தியுற்று தமாகாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸுக்கே சென்ற வேலூர் தொழிலதிபர் முனிரத்னம் சோளிங்கர் தொகுதி காங். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இணைந்துள்ளது. அக்கூட்டணியில் தமாகாவிற்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமாகாவின் இந்த முடிவு அக்கட்சித் தலைவர்களில் சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால், தமாகாவில் இருந்து விலகி வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் முனிரத்தினம் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களோடு போய் சேர்ந்தார். இதேபோல், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் போன்றோரும் தமாகாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸிற்கே திரும்பினர்.

இவர்களில் முனிரத்னத்தைத் தற்போது சோளிங்கர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். தொழிலதிபரான இவர், கடந்த சட்டசபைத் தேர்தலின் போதே சோளிங்கர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு தராமல், முன்னாள் எம்.எல்.ஏ அருள்அன்பரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த முனிரத்னம், அதே தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினர்.
இத்தேர்தலைப் போலவே, அம்முறையும் காங்கிரஸ் திமுகசுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனபோதும், காங்கிரஸ் வேட்பாளர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவிடம் தோல்வி அடைந்தார். இதற்குக் காரணம் சுயேட்சையாக அதே தொகுதியில் களமிறங்கி வாக்குகளைப் பிரித்த முனிரத்னம் தான்.
இந்த சூழ்நிலையில் தான் வாசனோடு காங்கிரஸில் இருந்து வெளியேறி, தற்போது மீண்டும் கட்சியில் இணைந்த முனிரத்னத்திற்கு சோளிங்கர் பகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அத்தொகுதியில் இப்போதே காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications