பொருள் வாங்க வந்த பெண்ணிடம் சில்மிஷம்... மளிகை கடைக்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பொருள் வாங்க கடைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மளிகை கடைக்காரரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாமபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா (19).

அதே தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அப்துல்ஜாபர் (42).

Shop owner arrested for misbehaving with woman

சம்பவத்தன்று சங்கீதா பொருட்கள் வாங்க அபதுல் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சங்கீதாவின் கையைப் பிடித்து இழுத்து அப்துல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கணவர் வெங்கடேசனிடம், சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரும் கடைக்குச் சென்று அப்துலிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததன் பேரில், தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பொருள் வாங்கச் சென்ற தன்னிடம் சில்மிஷம் செய்ததாக அப்துல் மீது போலீசில் புகார் அளித்தார் சங்கீதா. அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் மளிகை கடைகாரர் அப்துல் ஜாபரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து அப்துல் ஜாபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+