பொருள் வாங்க வந்த பெண்ணிடம் சில்மிஷம்... மளிகை கடைக்காரர் கைது
சென்னை: சென்னையில் பொருள் வாங்க கடைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மளிகை கடைக்காரரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாமபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா (19).
அதே தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அப்துல்ஜாபர் (42).

சம்பவத்தன்று சங்கீதா பொருட்கள் வாங்க அபதுல் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சங்கீதாவின் கையைப் பிடித்து இழுத்து அப்துல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவர் வெங்கடேசனிடம், சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரும் கடைக்குச் சென்று அப்துலிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததன் பேரில், தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பொருள் வாங்கச் சென்ற தன்னிடம் சில்மிஷம் செய்ததாக அப்துல் மீது போலீசில் புகார் அளித்தார் சங்கீதா. அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் மளிகை கடைகாரர் அப்துல் ஜாபரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து அப்துல் ஜாபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications