For Daily Alerts
Just In
என்னாது சென்னையில் சாரல் மழையா.. வவ்வாவ்.. இந்தக் கோடையின் முதல் "துளிகள்"!
சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. இதனால் தென் தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு எதிர்பாராத வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து சென்னையில் சாரல் மழை பெய்தது. சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தியாகராயர் நகர், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
Comments
English summary
Shower rain in Chennai hits Saidapet, Madipakkam, Kodampakkam, T Nagar etc.