For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி 'சோழிங்கநல்லூர்'

By Madhivanan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டசபை தொகுதியாக சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் உருவெடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதிதான் அதிக வாக்காளர்களைக் கொண்டதாக உருவெடுத்துள்ளது.

voterlist

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,75,773 பேர் ஆவர். இவர்களில் ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45. 18 - 19 வயதுடைய இளைய வாக்காளர்களும் அதிக அளவாக 12,797 பேர் (ஆன்கள் 7214 , பெண்கள் 5583)உள்ளனர்.

சிறிய தொகுதி

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டசபை தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் (தனி) சட்டசபை தொகுதியாகும்.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,63,189 பேர் ஆவர். இவர்களில் ஆண்கள் 81,038, பெண்கள் 82,151.

English summary
According to the final rolls, the Assembly Constituency with the highest number of electors is Shozhinganallur in Kancheepuram district with 5,75,773 electors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X