3 மாணவிகள் தற்கொலை: கல்லூரி தாளாளர் வாசுகி போலீசில் சரண், முதல்வரை சிறையில் அடைக்க உத்தரவு
விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்த வழக்கில் கல்லூரி தாளாளரின் மகன் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கட்டணம் மட்டும் அதிகமாக வாங்கி, தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியனின் மகன் சுவாக்கர் சர்மாவை கைது செய்தனர். மேலும் கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டார்.
சுவாக்கர் சர்மா, கலாநிதி ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விடுதி வார்டன் லட்சுமி(37), விடுதி பணியாளர்கள் சுமதி(34), கோட்டீஸ்வரி ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதற்கிடையே மாணவிகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் மூன்று பேரின் பின் மண்டையில் பலத்த காயம் இருப்பதால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்களின் பெற்றோர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications