3 மாணவிகள் தற்கொலை: கல்லூரி தாளாளர் வாசுகி போலீசில் சரண், முதல்வரை சிறையில் அடைக்க உத்தரவு
விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்த வழக்கில் கல்லூரி தாளாளரின் மகன் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கட்டணம் மட்டும் அதிகமாக வாங்கி, தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியனின் மகன் சுவாக்கர் சர்மாவை கைது செய்தனர். மேலும் கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டார்.
சுவாக்கர் சர்மா, கலாநிதி ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விடுதி வார்டன் லட்சுமி(37), விடுதி பணியாளர்கள் சுமதி(34), கோட்டீஸ்வரி ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதற்கிடையே மாணவிகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் மூன்று பேரின் பின் மண்டையில் பலத்த காயம் இருப்பதால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்களின் பெற்றோர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications