For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்னல் கோளாறு.. பார்க் - கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பார்க் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Signal problem in Chennai Park station Rail transport affected

இதன்காரணமாக பார்க் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பார்க்-கடற்கரை இடையே புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Signal problem in Chennai Park station Rail transport affected

சென்னை பார்க் - கடற்கரை இடையே உள்ள ரயில் நிலையங்களில் காத்திருந்த மக்கள் ரயில் வராததால் பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.

இதனால் பேருந்துகளில் மக்கள் பயணிக்க தொடங்கியதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Signal problem in Chennai Park station Rail transport affected in between Chennai park to beach. People suffering by the rail transport affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X