சிக்னல் கோளாறு.. பார்க் - கடற்கரை இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி
சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பார்க் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பார்க் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பார்க்-கடற்கரை இடையே புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை பார்க் - கடற்கரை இடையே உள்ள ரயில் நிலையங்களில் காத்திருந்த மக்கள் ரயில் வராததால் பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் பேருந்துகளில் மக்கள் பயணிக்க தொடங்கியதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.