ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட 20 கிலோ வெள்ளி விநாயகர்: 22ம் தேதி கடலில் போட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ 9 லட்சம் செலவில் 20கிலோ எடையில் உருவாக்கப்பட்ட வெள்ளி பிள்ளையாரை வரும் 22ம் தேதி கடலில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. அன்றைய தினம், வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளைக் களிமண்ணால் செய்துவைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலனியில் சிவ சேனா அமைப்பு சார்பில் ரூ 9 லட்சம் செலவில், சுமார் 20கிலோ எடையில் வெள்ளியில் பிள்ளையார் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

மற்ற களிமண் சிலைகளைப் போலவே, இந்த வெள்ளி பிள்ளையாரையும் கடலில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன் கூறுகையில், ‘வரும், 14ம் தேதி, வரை விநாயகர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும். அன்று மாலை, காசிமேட்டில், கடலில் படகு மூலம் 10 கி.மீ., தூரம் சென்று சிலை, கடலில் போடப்படும். அதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

இந்த விநாயகருக்கு வினை தீர்க்கும் விநாயகர் என, பெயர் வைத்துள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலனுக்காக, யாகம் செய்து, ரூ.9 லட்சம் செலவழித்து வெள்ளியில் தயாரித்த விநாயகரை கடலில் விடுகிறோம். அது யாருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்று தான் நாங்கள் கருதுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+