காவிரி பிரச்சினை குறித்து சிம்பு என்ன சொன்னார் தெரியுமா? #சிம்பு
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள், கர்நாடக திரை நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சிம்புவும் காவிரி நீர் குறித்து ஒருசில கருத்துக்களை கூறியதாக டுவிட்டரில் செய்தி வெளிவந்துள்ளது.
காவிரி நீரை நாங்கள் பிச்சையாக கேட்கவில்லை. எங்களுக்குள்ள உரிமையைத்தான் கேட்கிறோம்' என்று சிம்பு சொன்னதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு கருத்து வைரலாக பரவி வருகிறது.

அதில் இனி சிம்புவின் படங்கள் கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படாது எனவும் பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னாயா அவன் தான் #தமிழன் #சிம்பு எனவும் டுவிட்டர் வாசிகள் பரப்பி வருகின்றனர்.
ஆனால் சிம்புவின் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெறும் 'தள்ளிப்போகாதே' பாடல் படப்பிடிப்பிற்காக தாய்லாந்தில் இருப்பதாகவும் அவர் காவிரி பிரச்சனை குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிம்பு குறித்து வைராலக பரவும் டுவிட்டர் பதிவுகள்:
என் திரைப்படம் இனி கர்நாடகாவில் திரையிடமாட்டேன் #சிம்பு
— ThaaruMaaru Arul (@Arul28667667) September 10, 2016
தமிழன் எப்பவுமே கெத்து தான்..😊
பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னாயா அவன் தான் #தமிழன் #சிம்பு
— ❤கனவுக்காதலன்❤ (@kanavukadhalan) September 10, 2016
என் திரைப்படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது #சிம்பு..#டீசரும் ட்ரெயிலரும்( ஆக) மட்டுமே திரையிடப்படும்!!!
— வழிபோக்கன் (@Mhdyahi) September 10, 2016
கர்நாடகாவில் இனி என் #படங்கள் ரிலீஸ்
— THANTHAARA (@CrAzYboyTHANUSH) September 10, 2016
ஆகாது - #சிம்பு அதிரடி #செய்தி👌👌👌#தமிழ்நாட்லயே படம் ரிலீஸ் ஆக மாட்டுதே#தலைவா - #சிம்பு_ரசிகர்கள்😂😂😂












Click it and Unblock the Notifications